நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த நிலையில், ஒரு பச்சை நிற வீடு மட்டும் வெள்ளத்தின் சீற்றத்தை தாங்கி உறுதியாக நின்ற அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீட்டின் பால்கனியில் சிக்கியிருந்த நபர்களின் நிலை என்ன ஆனது என்பதை விவரிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ள நீர் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தபோது, சுற்றியிருந்த பல வீடுகள் நொடிப் பொழுதில் இடிந்து விழுந்தன. ஆனால், இந்த பச்சை நிற வீடு மட்டும் அசையாமல் நின்றது. அதன் பால்கனியில் சிலர் உயிருக்குப் போராடியபடி நின்றுகொண்டிருந்தனர். அனைவரும் அச்சத்தில் உறைந்திருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு பால்கனியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியிலும், அந்த பச்சை நிற வீடு உறுதியாக நின்று மனித உயிர்களைக் காத்த இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.