ரூ.22,000 கோடி கடனில் 99.97% தள்ளுபடி: வெறும் ரூ.6.5 கோடி கட்டினால் போதும்! – அதிர்ச்சி அளித்த என்சிஎல்டி உத்தரவு

தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான கடன் விவகாரத்தில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள உத்தரவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் செலுத்த வேண்டிய ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடனில், சுமார் 99.97 சதவீதத் தொகையைத் தள்ளுபடி செய்து, வெறும் ரூ.6.5 கோடியை மட்டும் செலுத்துமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு பொதுத்துறை வங்கிகளுக்குப் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய பெருமளவிலான கடன் தள்ளுபடி, தற்போதைய சட்டப்பூர்வ நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்தும், பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் கடன் தீர்மானச் சட்டங்கள் குறித்தும் கடுமையான தேசிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாதாரண மக்கள் வாங்கும் சிறு கடன்களுக்குக் கடுமையான வசூல் நடைமுறைகளைப் பின்பற்றும் வங்கிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ள தொழிலதிபர்களுக்கு இவ்வளவு பெரிய சலுகை வழங்குவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top