‘உயிர் தப்பியது அதிசயம்!’ – இரானில் எஃப்-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னரும் 48 மணி நேரம் தப்பிப்பிழைத்த அமெரிக்க விமானி!

ஈரான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படையின் எஃப்-15 (F-15) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் பயணித்த அமெரிக்க விமானி 48 மணி நேர திகில் அனுபவத்திற்குப் பிறகு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் தாக்குதலுக்கு உள்ளான நொடியில், சேதமடைந்த பாராசூட் உதவியுடன் கட்டுப்பாடின்றி தரைநோக்கி அதிவேகமாக விழுந்ததாக அந்த அமெரிக்க விமானி தெரிவித்துள்ளார். எதிரி நாட்டின் நிலப்பரப்பில் விழுந்தபோதிலும், சுற்றியிருந்த பேரபாயங்களுக்கு நடுவே 48 மணி நேரம் மிகச்சாமர்த்தியமாகத் தலைமறைவாக இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.

வானில் இருந்து கீழே விழும்போது உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை என்றும், இந்த ஆபத்தான சூழலில் இருந்து மீண்டு வந்தது முற்றிலும் ஒரு அதிசயம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் உற்றுநோக்கப்படும் இந்தச் சம்பவம் மற்றும் விமானியின் தப்பிப்பிழைக்கும் உத்திகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top