மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தீவிரத் தாக்குதல்களில், அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை விவரிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவ முகாம்கள் இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிபிசி ஊடகத்தின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் (CBS) இந்த பிரத்யேக புகைப்படங்களைப் பெற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க ராணுவத் தளங்களின் முக்கியக் கட்டிடங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஈரானின் தாக்குதல்களால் சுக்குநூறாகச் சேதமடைந்திருப்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் இழப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.