52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
இணைந்து போராட்டத்தை முன்னெடுபோம்: மு.க. ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு – பின்னணி என்ன?

எதிர்க்கட்சி தலைவரான இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு காலையில் இருந்தே பலத்தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்தது. குறிப்பாக நீண்ட காலமாக தொடர்ந்து வந்த திமுக கூட்டணி உடைந்தது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது. எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தவெகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.இது அரசியல் களத்தில் பல விதமான விமர்சனங்களை கிளப்பிய நிலையில், திமுகவினர் கடும் கோபம் அடைய செய்தது. திமுக கட்சியை சார்ந்தவர்களின் உழைப்பில் வெற்றி பெற்று, தற்போது கூட்டணி மாறியுள்ளது நியாயமே இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதோடு ராகுல் காந்தி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே இல்லை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் எதுவும் வராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டார் மு.க. ஸ்டாலின். இது திமுகவினரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதோடு உங்களின் நாகரீக அரசியலுக்கு அளவே இல்லையா தலைவரே எனவும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், துரோகங்களை எல்லாம் மறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அணுகுமுறை அரசியலின் உச்சம் எனவும் பலரும் கருத்து கூறினார்கள். இப்படியான நிலையில் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பகிர்ந்துள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில் அரசமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான நமது உறுதிப்பாடு தொடரும். இந்த போராட்டம் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கானது.இதில் வெற்றி பெறும் வரை இணைந்து நாம் போராட்டத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதை போன்று அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு அரசியல் களத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பி இருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியில் திமுக தொடர வேண்டும் என்ற பொருள்படும் படி ராகுல் காந்தி இந்த பதிவினை பகிர்ந்து இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் திமுகவை காங்கிரஸ் நடத்திய விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. அதோடு இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் திமுகவை கொண்டு வர வேண்டுமெனவும் குரல்கள் வலுப்பெற்றன. இதையெல்லாம் மனதில் வைத்து ராகுல் காந்தி இந்த பதிவினை வெளியிட்டு இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *