பாகிஸ்தான் – சவுதி ராணுவக் கூட்டணி: இணையத் தயார்… ஆனால் அதிரடி நிபந்தனை விதித்த ஈரான்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் புதிய ராணுவக் கூட்டணியில் ஈரானும் இணையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்தக் கூட்டணியில் இணைவதற்கு ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, மண்டலப் பாதுகாப்பு தொடர்பான இதுபோன்ற முக்கிய ஒப்பந்தங்களில் ஈரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத சக்திகளாகும். எனவே, வெறும் சாதாரண உறுப்பினராக இல்லாமல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் ஆவணங்களை உருவாக்கும் ‘இணை நிறுவன உறுப்பினர்களாக’ (Co-founding members) தங்களைச் சேர்க்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

அதாவது, கையெழுத்திடப்படும் ஆவணங்களை உருவாக்கும் போதே ஈரானின் கருத்துக்களும் யோசனைகளும் நேரடியாக இடம்பெற வேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது. மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலில், ஈரானின் இந்த நிபந்தனையை பாகிஸ்தான் மற்றும் சவூதி கூட்டணி ஏற்றுக்கொள்ளுமா என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top