சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு கடையில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த டெனிம் ஜாக்கெட் ஒன்று திருடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் நாட்டு நபர், திருடிய கையோடு அதிகாரிகளின் கண்ணில் படாமல் சிங்கப்பூரை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு அந்தப் பிரிட்டன் நபரைச் சிங்கப்பூர் அதிகாரிகள் மீண்டும் அடையாளம் கண்டு அவர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். எத்துணை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் பிடிப்பதில் சிங்கப்பூர் காவல்துறை எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.