மெட்டாவின் அதிர்ச்சி முகம்: இந்தியாவில் ஏஐ மூலம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக விளம்பரங்கள் – வெளிவந்த திடுக்கிடும் அறிக்கை!

சமூக வலைதள நிறுவனமான மெட்டா, இந்தியாவில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக ஒரு புதிய ஆய்வறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி பிரச்சாரக் குழு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கடந்த 10 மாதங்களில் மட்டும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் தனது தளங்களில் வெளியிட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்கள் இந்திய பயனர்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது பெரும் கவலையை அளிப்பதாக உள்ளது.

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விதிகளை கடுமையாகப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் மெட்டா, இத்தகைய கொடூரமான விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மெட்டா நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top