ஜாம்பியா: காடுகளில் வாழும் விலங்குகளின் வாழ்வியல் எப்போதும் மனிதர்களுக்கு அளப்பரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில், தங்களது இனப்பெருக்கத்திற்காகவும் புதிய துணையைத் தேடியும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள் கூட்டம் ஒன்று சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரம் தொடர்ந்து பயணித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்தப் பயணம், ஆப்பிரிக்கக் காட்டு நாய்களின் வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தூரப் பயணமாகப் பார்க்கப்படுகிறது. அடர்ந்த காடுகள், ஆபத்தான நதிகள் மற்றும் பிற இரைகொல்லி விலங்குகளின் அச்சுறுத்தல்களையும் கடந்து, தங்களது கூட்டத்திற்கான புதிய துணையைக் கண்டறிய இவை இந்த அசாத்திய பயணத்தை மேற்கொண்டுள்ளன.
சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் காடுகள் அழிப்பால் காட்டு நாய்களின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வரும் சூழலில், தங்களது இனத்தைப் பெருக்கவும் மரபணு பல்வகைமையைப் பேணவும் இவை மேற்கொண்ட இந்த நெடும் பயணம், வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.