
அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக அதிமுகவை ஆக்டிவாக வைத்து கொள்ளும் விதமாக தவெகவை கண்டித்து இபிஎஸ்ஸும், ஐடி விங்கும் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் தவெக அரசினை கண்டித்து அதிமுக போராட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தான அறிவிப்பு வெளியானது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 50,000 கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு விவாசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது,ஏனென்றால் முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் ஐந்து ஏக்கருக்கு குறைவாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் தற்போது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றாமல், வேறொரு அறிவிப்பினை தவெக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.இது சம்பந்தமாக விவசாயிகளும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போன்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதோடு போராட்டங்களையும் முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிமுகவும் இது சம்பந்தமாக போராட்டம் அறிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற வேண்டும். மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டை போர்க்கள அடிப்படையில் சரி செய்ய வேண்டும். இவை இரண்டையும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக வரும் 19 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே விவாசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை தவெக அரசு பல்வேறு வகைகளை வஞ்சித்து வருகிறது. அதோடு ஏமாற்றியும் கொண்டிருக்கிறது. இது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை போன்று பயிர்க்கடன் தள்ளுபடியை செய்ய வேண்டும். மற்றும் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி திடல் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்ந்தவர்களும், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பங்கேற்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. ஏற்கனவே மின்வெட்டை கண்டித்து சிபிஐ போராட்டம் ஒன்றை அறிவித்தது. இதனையடுத்து தற்போது அதிமுகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக தெரிவித்துள்ளது. இதனிடையில் தவெக ஆட்சியில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
