52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
15 வருட லிவ்-இன் உறவு.. பெண்ணை கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த நபர் -சென்னையில் நடந்த என்ன?

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சாந்தி (48). திருமணமான இவர், தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சாந்திக்கு ராஜேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமான உறவாக மாறியதையடுத்து, இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

15 வருட லிவ்-இன் உறவு..

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சாந்தி மற்றும் ராஜேந்திரன் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறுகள் நடந்துள்ளன. நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சாந்தி, ராஜேந்திரனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை மற்றும் கோபத்தில் இருந்த ராஜேந்திரன், சாந்தி மீது பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சாந்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜேந்திரன் வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து அவரது தலை, கழுத்து மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன், தலையில் கடுமையாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண்ணை கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த நபர்

சாந்தி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், இரவு முழுவதும் அவரது உடலின் அருகிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காலை விடிந்ததும், அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்ற அவர், கொலைக்கு பயன்படுத்திய சுத்தி மற்றும் கத்தியை போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையின் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அண்ணா நகர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த சாந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் தீவிர விசாரணை

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அண்ணாநகர் காவல்துறையினர் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? முன்விரோதம் அல்லது குடும்பப் பிரச்சினை ஏதேனும் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் முழு விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *