கடல் உணவு தொழிற்சாலை விபத்து
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களில் 14 பேர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இரண்டு பேர் அசாம் மாநிலத்தையும், ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களே இந்த விபத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமோனியா வாயு கசிவில் 18 பேர் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே உள்ள யில் அமைந்துள்ள இந்த கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் வழக்கமான உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு துறையினர் விசாரணை
இந்த விபத்தில்பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 15 பெண்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

