இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 190/7 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19 ஓவர்களில் 191/6 ரன்களை அடித்து வெற்றியைப் பெற்றது.இப்போட்டியில், இங்கிலாந்து அணி, 16 ஓவர்கள் முடிவில் 142/5 என ரன்களை அடித்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, இரண்டு தரமான ஓவர்களை வீசினால், இந்திய அணி அபார வெற்றியைப் பெறுவது உறுதி எனக் கருதப்பட்ட நிலையில், 17ஆவது ஓவரை வீசிய ரவி பிஷ்னோந், 2 நோ பால்களை வீசி, இரண்டு பிரிஹிட்டிலும் சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார். மேலும், ஒரு பவுண்டரி, சிக்ஸர் என அந்த ஓவரில் மட்டும் 29 ரன்களை வாரி வழங்கி, தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.இந்நிலையில், இப்போட்டி முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரிடம், ரவி பிஷ்னோயின் 17ஆவது ஓவர்தான் தோல்விக்கு காரணமாக, என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் நஷிர் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷ்ரேயஸ் ஐயர், ‘‘எந்த வீரரையும் குறிப்பிட்டு, தோல்விக்கு இவர்தான் காரணம் என கூற விரும்பவில்லை. 15ஆவது ஓவர வரை, நிச்சயம் வென்றுவிடுவோம் என்ற முழு நம்பிக்கை இருந்தது. அதன்பிறகு, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது’’ எனக் கூறினார்.ரவி பிஷ்னோய், இப்போட்டியில் மூன்று நோ பால்களை வீசினார். 4ஆவது ஓவரில் ஒரு நோ பால், அடுத்து 17ஆவது ஓவரில் 2 நோ பால்கள். இந்த மூன்று நோ பால்களும், சைட் கிரிஸை மிதித்ததால் நடந்தவை. இதனை தவிர்த்திருக்கலாம். ஆனால், அடுத்தடுத்து மூன்று முறை, இப்படி ஒரே மாதிரி நோபால் வீசியது குறித்துப் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ‘‘பிஷ்னோய், முதல் முறை தவறு செய்தபோது, அவர் நிச்சயம் திருத்திக் கொள்வார் என நம்பினேன். இதனால்தான், 17ஆவது ஓவரை கொடுத்தேன். அப்போதும், 2 நோபால்களை வீசி சொதப்பினார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் இதில், இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.சூர்யவன்ஷி, அறிமுக வீரராக ஆடியது குறித்துப் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ‘‘அவருக்கு, இது நல்ல அனுபவமாக இருக்கும். பயிற்சியின்போது அபாரமாக செயல்பட்டார். இதனால்தான், 2ஆவது போட்டியில் சேர்த்தோம். அவருக்கு, இப்போட்டி நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.தொடர்ந்து பேசிய ஷ்ரேயஸ் ஐயரிடம், கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, 4 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெற்றுத் தரவில்லை. இதனை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷ்ரேயஸ் ஐயர், ‘‘இதனால், எனது மன உறுதி குறைந்துவிடாது. நான் இப்போதும் நேர்மறையாகதான் உணர்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி கம்பேக்கை கொடுத்து, இந்திய அணி, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்’’ எனக் கூறினார்.இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3ஆவது டி20 போட்டி, வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

