52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தவெக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலை வழங்குகிறதா? சிபிஎம் சண்முகம் முன்வைத்த குற்றச்சாட்டு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. இதனிடையில் சிபிஎம் எம்பி சுப்பராயன் இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்தார். அவரை தொடர்ந்து தற்போது சிபிஐ கட்சியும் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவினை எதிர்த்துள்ளது.இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஏற்கனவே கரூருக்கு தமிழக முதல்வர் வருகின் தந்திருந்த சமயத்தில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. இந்நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப் போவதாக தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்ற காரணத்தால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வேலை வாய்ப்பினை வழங்குகிறதா என்ற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது சம்பந்தமான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும் என்கின்ற விமர்சனங்களை தனது பதிவில் முன்வைத்துள்ளார் பெ. சண்முகம்.தொடர்ந்து, பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவது என்பது வேறு. அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது சம்பந்தமாக அரசு ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) உருவாக்க வேண்டும்.அதுவரைக்கும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை வழங்கும் அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தன்னுடைய பதிவில் தெரிவித்து இருக்கிறார் பெ. சண்முகம். ஏற்கனவே சிபிஐ கட்சியை சார்ந்த எம்பி சுப்பராயன் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடு செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பும், கடமையும். இது அதிகார துஷ்பிரயோகம் என கடும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.இந்நிலையில் சிபிஐ கட்சியின் மாநில செயலாளரும் அதே போன்ற ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளும் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைய ஆதரவினை வழங்கிய கட்சிகள். தற்போது அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தற்போது கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேசு பொருளாக மாறியுள்ளது.சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முன்வைத்துள்ள கருத்துக்களும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரூர் இடைத்தேர்தல் வெற்றி ஆதாயத்தை மனதில் வைத்து 32 பேருக்கு அரசு பணி வழங்கப்படுகிறது. இது அரசு தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களின் வாய்பினை பறிக்கும் செயல் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *