52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
விஜய்யை விமர்சனம் செய்ததற்காக மாற்றுத்திறனாளி கைது: அரசியல் அடக்குமுறை – மாரிதாஸ் வெளியிட்ட பதிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கரூர் சென்ற முதல்வர் திமுகவை வழக்கம் போல் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிடாமல் அவரை சீண்டும் விதமாகவும் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் கரூர் வந்திருந்த சமயத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாக மாற்றுத்திறனாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல்வர் ஜோசப் விஜய் கரூர் வந்திருந்த நிலையில், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் அதே மாவட்டத்தை சார்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விமர்சித்து பேசியிருந்தார். இதனிடையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தை சார்ந்த வேலுப்பிள்ளை என்ற தங்கமணி, முதல்வர் விஜய் கரூர் வந்திருந்த சமயத்தில் அவரை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் திமுகவின் வார்டு தொழில்நுட்ப அணி நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். அதோடு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இணையத்தில் பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பதிவிட்டு இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தவெகவின் குளித்தலை நகர செயலாளர் விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலுப்பிள்ளை என்ற தங்கமணி கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. நடக்கவே முடியாத நிலையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் இந்த கைதுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த கைது தொடர்பாக காட்டமாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.இது சம்பந்தமாக அவர் பகிர்ந்துள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது, விஜய்யை விமர்சன் செய்த காரணத்திற்காக மாற்றுத்திறனாளி நபரை கைது செய்துள்ளது விஜய் அரசு. நைஸ் என விமர்சித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்து மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வைத்து தூக்கிட்டு போய் உடல் தொகுதி வாங்கி காவல்துறை சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது வெரி நைஸ் எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அரசியல் அடக்கு முறையை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது தான் இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை பார்க்கிறேன். மாற்றுத்திறனாளி என்பது தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெறுவதற்கு முயற்சி செய்த காவல்துறை பணி சூப்பர் எனவும் தன்னுடைய பதிவில் கடுமையான விமர்சனங்களை மாரிதாஸ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவிற்கு எக்கச்சக்கமான கமெண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.இதற்கிடையில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட விஷயம் தெரிந்து குளித்தலை அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் அருகே திமுக எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர், மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனை தொடர்ந்து குளித்தலை நீதிமன்றத்தில் தங்கமணி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனிடையில் முதல்வரை விமர்சனம் செய்ததற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *