நேபாள வெள்ளப்பெருக்கு: முன்எச்சரிக்கை அளிக்கத் தவறியதா சீனா? வெடிக்கும் சர்வதேச சர்ச்சை!

நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பெரும் பேரழிவு தொடர்பாக, பக்கத்து நாடான சீனாவைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக சீனா உரிய நேரத்தில் தங்களுக்கு முன்எச்சரிக்கை தகவல்களை அனுப்பத் தவறிவிட்டதாக சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இது குறித்து நேபாள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “இந்த வெள்ளத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இதுவரை வெள்ளத்திற்கான சரியான காரணத்தைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாள எல்லைக்குள் ஏற்பட்டதா அல்லது திபெத் பகுதியை நோக்கி நிகழ்ந்ததா என்பதும் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இமயமலை எல்லைப் பகுதிகளில் ஏற்படும் இதுபோன்ற திடீர் இயற்கைச் சீற்றங்கள் மக்களின் உயிர்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இந்தச் சூழலில், எல்லை தாண்டிய ஆறுகள் மற்றும் சீற்றங்கள் தொடர்பான விவரங்களை சீனா முன்கூட்டியே பகிர்ந்துகொள்ளவில்லை என்ற விவாதம் சர்வதேச அளவில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top