திபெத்தில் புதிதாக உருவான ஏரியால் உடைப்பு அபாயம்: நேபாளத்தில் தீவிர வெள்ள எச்சரிக்கை!

திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து புதிதாக உருவான தற்காலிக ஏரியில் இருந்து நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளதால், நேபாள நாட்டில் மீண்டும் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த புதன்கிழமை திபெத்தின் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ஆற்றின் குறுக்கே இயற்கை அணை போன்ற ஏரி அமைப்பு (Barrier Lake) உருவானது. இதில் பெருமளவில் நீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது அந்த ஏரியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வெளியேறுவதாக சீன அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஏரி திடீரென உடையும் பட்சத்தில், கீழ்நோக்கிப் பாயும் நதிகளில் பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்த அசாதாரண சூழல் காரணமாக திபெத் பகுதியில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் பாதுகாப்பு கருதி காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏரி உடையும் பட்சத்தில் நேபாள எல்லையோரக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால், அம்மாநில அரசு மக்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top