நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இமயமலைக் தொடரில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு, அப்பகுதியில் கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை உடைந்ததால் உருவான திடீர் பெருவெள்ளம் காரணமாக, ஆற்றின் குறுக்கே இருந்த அணைகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பேரழிவின் தீவிரத்தை பிபிசி வெரிஃபை (BBC Verify) குழுவினர் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். பனிப்பாறை சரிந்ததில் இருந்து, அது வெள்ளமாக மாறிய பாதை, வழியில் இருந்த கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த துல்லியமான அறிக்கையை இந்த செயற்கைக்கோள் படங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. காலநிலை மாற்றத்தின் காரணமாகவே இமயமலைப் பகுதியில் இது போன்ற அசாதாரண பனிப்பாறை சரிவுகள் அதிகரித்து வருவதாக பருவநிலை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.