திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் 29 ஆண்கள் தற்கொலை? – அதிர்ச்சிளிக்கும் கள ஆய்வு விவரம்!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில், திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் 29 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்களின் தற்கொலை முடிவுக்கு திருமணம் தொடர்பான சிக்கல்களே முக்கியக் காரணியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, “தற்கால சூழலில் இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது” என்ற பேச்சு அப்பகுதியில் பரவலாக எழுந்துள்ளது. ஆண்-பெண் பாலின விகிதாசாரக் குறைபாடு, வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை இதற்கு பின்னணியாக இருக்கலாமா என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது.

உண்மையிலேயே மணமகள் கிடைக்காததுதான் இந்த தற்கொலைகளுக்குக் காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் ஆழமான சமூகப் பிரச்சினைகள் ஒளிந்துள்ளனவா என்பது குறித்து பிபிசி நிறுவனம் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு உண்மையைத் தேடி வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top