நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: 10 கி.மீ சுரங்கத்தில் 40 இந்தியர்கள் உட்பட 400 பேர் சிக்கு தவிப்பு – 1000 பேரின் நிலை என்ன?

நேபாள நாட்டின் சீன எல்லைப் பகுதியான ராசுவாகதியில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் 9 நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த 1,000 தொழிலாளர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட சுரங்கப்பாதைக்குள் 40 இந்தியர்கள் உட்பட 400 பேர் சிக்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தின் சீற்றம் மிகக் கடுமையாக இருப்பதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நேபாள அரசும், இந்திய வெளியுறவுத் துறையும் இணைந்து மீட்புப் பணிகளை வேகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உயிருக்குப் போராடி வரும் தொழிலாளர்களை விரைவாக மீட்க அங்கு அவசரக்கால உதவிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top