ரூ.22,000 கோடி கடன்… வெறும் ரூ.6.5 கோடி செட்டில்மெண்டா? தொழிலதிபர் சுபாஷ் சந்திரா வழக்கில் NCLT-யின் அதிரடி நகர்வு!

ஜி குழுமத்தின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான சுபாஷ் சந்திரா மீதான தனிப்பட்ட திவால் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ₹22,006.57 கோடி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பிரம்மாண்டமான கடனைத் தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய தீர்மானத் திட்டத்தில், கடன் வழங்கியவர்களுக்கு வெறும் ₹6.25 கோடியும், திவால் நடவடிக்கைகளுக்கான செலவினங்களாக ₹25 லட்சமும் மட்டுமே வழங்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடனுக்கு வெறும் 0.03 சதவீதம் மட்டுமே திருப்பிக் செலுத்த முன்வந்துள்ள இந்த திட்டம் நிதிச் சந்தையிலும், கடன் வழங்கிய வங்கிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திரமான தீர்வுத் திட்டம் குறித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, கார்ப்பரேட் கடன் மறுசீரமைப்பு நடைமுறைகளில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இவ்வளவு பெரிய இழப்பை கடன் வழங்கிய அமைப்புகள் ஏற்றுக்கொள்ளுமா மற்றும் NCLT-யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை முழு நிதி உலகமும் உற்றுநோக்கி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top