நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேரழிவிற்கு இடையே, திரிசூலி ஆற்றின் குறுக்கே உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் பணியாற்றிய நேபாளத் தொழிலாளி ஒருவர் மரணத்தின் பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தனது திகிலூட்டும் அனுபவம் குறித்துப் பேசிய அவர், “சுரங்கப்பாதைக்குள் திடீரென சீறிப் பாய்ந்து வந்த ஆற்று நீர் என்னைச் சுமார் 20 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக துரத்தியது” எனக் கூறி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
திடீரென சுரங்கத்திற்குள் நீர் புகுந்ததும், சற்றும் யோசிக்காமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருண்ட பாதை வழியே ஓடியதாகவும், சரியான நேரத்தில் மேடான பகுதியை அடைந்ததால் மட்டுமே உயிர் பிழைக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். நேபாள நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கைச் சீற்றங்களில் ஒன்றாக இந்த வெள்ள பாதிப்பு மாறியுள்ளது.