பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் திடீரென மூடப்பட்டது, உலகெங்கிலும் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சர்ச்சை காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட வருகை தந்த இந்து மதத் தூதுக்குழுவிற்காக, அங்கு வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் சிலர் திடீரென பணியிடத்திலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் பாலினப் பாகுபாடு மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானது என அங்குள்ள ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பெண் ஊழியர்கள் மாற்றப்பட்டதைக் கண்டித்து, ஈபிள் கோபுர ஊழியர்கள் அனைவரும் உடனடியாகத் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது. சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.