சௌதி அரேபியா மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில், சௌதி அரேபியாவுடன் ‘மெக்கா ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், செளதிக்கு உடனடியாக ராணுவ உதவி வழங்காமல் அமைதி காத்து வருவது உலக நாடுகளிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அதைச் செயல்படுத்துவதற்கான சரியான சூழலோ அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரியோ தற்போதைக்கு இல்லை என்பதே இதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தங்கள் நாட்டிற்கு எதிரான நேரடி அச்சுறுத்தலாக பாகிஸ்தானும் துருக்கியும் கருதவில்லை.
இதன் காரணமாகவே, மெக்கா ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், சௌதி அரேபியாவிற்கு ஆதரவாகத் தங்கள் நாட்டுப் படைகளை அனுப்பாமல் இரு நாடுகளும் தூதரக அளவிலான நிதானப் போக்கைக் கையாண்டு வருகின்றன. இந்த விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சர்வதேச உறவுகளில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.