மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ-எம்), தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவை அறிவித்தனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்களது கொள்கைகளையும் மக்கள் பிரச்சனைகளையும் முன்வைத்து தீவிரமாக களமிறங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு மத்தியில், இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடும் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top