தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே உருவெடுத்துள்ள மோதல், கொள்கை சார்ந்த விவாதங்களைக் கடந்து தனிப்பட்ட நபர் சார்ந்த தாக்குதல்களாக உருவெடுத்து வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களிலும் பொது மேடைகளிலும் மாறி மாறி கடுமையான சொற்களால் வசைபாடி வருகின்றனர். இதனால் தமிழக அரசியலின் மரபுவழி நாகரிகமும், ஆரோக்கியமான விவாதங்களின் தரமும் தேய்ந்து வருவதாக சமூக ஆர்வலர்களும் மூத்த அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள், விமர்சனங்கள் கொள்கை மற்றும் அரசு நிர்வாகம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கண்ணியமான விமர்சனங்களை முன்வைப்பதே ஜனநாயகத்திற்கு அழகாகும்.