செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Glasses) உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. விரைவில் நமது அன்றாட வாழ்க்கையிலும், பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் தெருக்களிலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் பயன்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், இந்தத் தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகள் குறித்த அச்சத்தையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களை ரகசியமாக வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கு இந்த சாதனம் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இத்தகைய தவறான பயன்பாடுகளைத் தடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம் இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் வீடியோ பதிவாகும் போது வெளிச்சம் தரும் எச்சரிக்கை விளக்குகள் போன்ற பாதுகாப்பு நுட்பங்களைச் சேர்த்துள்ளது. இருப்பினும், நவீன தொழில்நுட்பத்தின் இந்த மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் புரட்சி மக்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.