சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பான புதிய மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின் மூலம், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் பெருமளவில் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. அமெரிக்காவின் இந்த புதிய மசோதா மூலமாக கடுமையாக பாதிக்கப்படக்கூடிய ஐந்து முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வரிகளை உயர்த்தினால், இந்தியாவில் எரிபொருள் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி சட்டத்திருத்தம் சர்வதேச வர்த்தக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.