இரானின் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படையின் எஃப்-15 (F-15) போர் விமானம் திடீரென சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் இருந்து உயிர் தப்பிய அமெரிக்க விமானி தனது திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தாக்குதலின் போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் அவசரமாக வெளியேறிய நிலையில், அந்த பாராசூட்டும் சேதமடைந்து கட்டுப்பாடின்றி அதிவேகமாக தரைநோக்கி விழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிரி நாடான இரானின் எல்லைக்குள் விழுந்த போதிலும், சுமார் 48 மணி நேரம் அங்குள்ள ராணுவத்தினரிடம் சிக்காமல் மறைந்திருந்து தப்பியது ஒரு பெரும் அதிசயம் என அவர் கூறியுள்ளார். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த இந்த நரக வேதனை நிறைந்த தருணங்கள் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.