52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
வீடு கட்ட 40 லட்சம் ரூபாய் வரை கடன்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய திட்டம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எளிதாக வீட்டு வசதி பெறுவதற்காக “டிரைபல் பிளஸ் கடன் திட்டம்” என்ற பிரத்யேக கடன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அடமானம் வைப்பதிலும், நில உரிமையிலும் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, முறையான வங்கித் தேவைகளைப் பெறுவதில் உள்ள சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியின் குவஹாத்தி மற்றும் ராய்ப்பூர் மண்டலங்களின் கீழ் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க தகுந்த நிதித் தீர்வுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாதச் சம்பளம் பெறுவோர், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் குடியிருப்பு வீடுகள், பிளாட்டுகளை வாங்குவதற்கும், கட்டுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் அல்லது விரிவாக்கம் செய்வதற்கும் ரூ. 40 லட்சம் வரை கடன் பெறலாம். டிரைபல் பிளஸ் கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!பயன்பாடு: குடியிருப்பு வீடுகள், பிளாட்டுகளை வாங்குதல், கட்டுதல், பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான நிதி உதவி.கடன் தொகை: தகுதியுள்ள மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரையிலும்; தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ரூ. 25 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.திருப்பிச் செலுத்தும் காலம்: 15 ஆண்டுகள் வரையிலான நெகிழ்வான கால அவகாசம்.வட்டி விகிதம்: விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் கடன் மதிப்பீட்டின் அடிப்படையில் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்கள்.தகுதி விதிமுறைகள்: மாதச்சம்பளம் பெறுவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட தகுதி விதிமுறைகள் இருக்கும்.சிறப்பு வடிவமைப்பு: வழக்கமான முறையில் சொத்துக்களை அடமானம் வைப்பதில் சிக்கல் உள்ள பழங்குடியின பகுதிகளில், வீட்டு வசதி கடனை எளிதாக்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு.கிடைக்கும் இடங்கள்: இத்திட்டத்திற்கு உட்பட்ட பழங்குடியின பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைகள் மூலம் இக்கடனைப் பெறலாம்.இந்தத் திட்டம் குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் சுபோத் குமார் கூறுகையில், ”புதுமையான மற்றும் தேவை அடிப்படையிலான வங்கிச் சேவைகளின் மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கும் முறையான நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதில் பஞ்சாப் நேஷனல் வங்கி எப்போதும் உறுதியுடன் உள்ளது. பழங்குடியின பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டு வசதி கடன் பெறுவதில் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைக் களைவதற்காகவே 'PNB டிரைபல் பிளஸ் கடன் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம், பழங்குடியின மக்களின் சொந்த வீட்டு கனவை ஆதரிப்பதோடு, முறையான வங்கி கடனுதவியை எளிதாக்கி, அப்பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *