தொடர்ந்து வரும் உடல்நலப் பிரச்சினைகள்:
தனது சிகிச்சை குறித்துப் பேசிய எ.வ.வேலு, "எனக்கு உடலில் சில உபாதைகள் உள்ளன. அலர்ஜி, நியூரோ (நரம்பியல்) மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் எனக்கு உண்டு. இதற்காகவே நான் சிங்கப்பூர் சென்றேன். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் இதயம் தொடர்பான சிகிச்சையை நான் முதன்முறையாக எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2023ஆம் ஆண்டிலும் அதே மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெற்றேன்.உடலில் எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய ஒரு தடுப்பூசி செலுத்தி, மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்து சோதனை செய்வார்கள். அதிலேயே 3 நாட்கள் முடிந்துவிட்டன. அதனைத் தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி நரம்பியல் பிரச்சினைக்காகப் பரிசோதனை செய்தேன்.
பயத்திலோ சுற்றுலாவுக்காகவோ சிங்கப்பூர் செல்லவில்லை
ஜூன் 30ஆம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக மருத்துவரைச் சந்தித்தேன்.ஜூலை 3ஆம் தேதி இதய மருத்துவ நிபுணர் ஜெயராமனைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றேன். ஒன்பதாம் தேதி வரை எனக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்றன என்று தனது மருத்துவப் பயணத்தின் முழு விவரங்களையும் பட்டியலிட்டார்.தொடர்ந் து பேசியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்னை கொறடாவாக இடத்திற்கு நியமித்திருக்கிறார். அதை இந்த அரசாங்கமும், குறிப்பாகத் சபாநாயகரும் முழுமையாக அங்கீகரித்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது அரசு சார்ந்த கேள்விகளை எழுப்புவதாக இருந்தாலும் சரி, அதைச் செய்வதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு முழு சுதந்திரம் உண்டு.அண்மையில் மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட, மக்கள் சார்ந்த அதிகப்படியான கேள்விகளை நான் தான் எழுப்பியிருப்பேன். நான் அவையில் பேசவே கூடாது என்று யாராவது நினைக்கிறார்களா என்பது போகப் போகத்தான் தெரியும் என்றார்.
நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன்
தன் மீதான வழக்குகள் குறித்துப் பேசியவர் நான் எப்போதும் நீதிக்குத் தலை வணங்குவேன். நீதிமன்றம் எனக்கு நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் சொல்கிறேன், நான் எந்தவிதமான குற்றமும் புரியவில்லை. தவறு செய்ய வேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது.தற்போது நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கை நான் தொடுத்திருக்கிறேன். மாண்புமிகு நீதிபதி அவர்கள் எனக்கு நல்லதொரு நீதியை வழங்குவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. நன்றி, வணக்கம் என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.

