
போக்குவரத்து நெரிசலால் தாமதம்?
மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், தேர்வு மையத்திற்கு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகிவிட்டதாக தெரிவித்தனர். இருப்பினும், விதிமுறைகளை சுட்டிக்காட்டிய தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.இதனால் தேர்வு மைய வளாகத்தில் பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், விதிமுறைகளில் எந்த வித தளர்வும் வழங்கப்படவில்லை.
"என் மகனின் கனவு போய்விட்டது"
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர் சந்திரிகா, "போக்குவரத்து நெரிசலால் எங்களுக்கு வெறும் 5 நிமிட தாமதம் ஏற்பட்டது. அதற்காக எங்கள் பிள்ளைகளை தேர்வு எழுத விடாமல் தண்டித்துவிட்டார்கள். பல மாதங்களாக உழைத்த குழந்தைகளின் எதிர்காலம் ஒரு சில நிமிடங்களால் பாதிக்கப்பட்டுள்ளது" என்று வேதனையுடன் கூறினார்.மேலும், "ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதியபின் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவசர உதவி எண்ணிலும் ஏமாற்றம்
தேர்வு மையத்தில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்துஅவசர உதவி எண்ணை தொடர்புகொள்ள முயன்றதாகவும், நீண்ட நேரம் கழித்தே அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். பின்னர் பேசிய அதிகாரிகளும், நேரம் கடந்த பிறகு எந்த மாணவரையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கண்ணீரில் மூழ்கிய மாணவர்
தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான தனது மருத்துவ கனவு கலைந்துவிட்டதாக கதறி அழுததாக பெற்றோர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் விவாதம்
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்வு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டுமா அல்லது மாணவர்களின் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு சில நிமிட தளர்வு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
