52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
குஷ்பு மக திருமணத்திற்கு விமானத்தில் என் பக்கத்து சீட்ல இருந்த பாக்யராஜுக்கு இன்று மாலை போடுறேனே: பி. வாசு

வாசு சொன்ன தகவல்: இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இறந்துவிட்டார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததை நம்ப முடியாமல் அனைவரும் தவிக்கிறார்கள். நாளை அவரின் இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பாக்யராஜின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு இருக்கும் செய்தியாளர்களிடம் திரைக்கதை மன்னன் பற்றி பேசுகிறார்கள். அப்படி இயக்குநர் பி. வாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது,நம்ப மறுக்கும் வாசு: முந்தானேத்து நானும், பாக்யராஜும் ஒரே விமானத்தில் பக்கத்து பக்கது சீட்டில் அமர்ந்து கோவா சென்றோம். இருவரும் கோவாவுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில் இன்று அவரின் உடலுக்கு மாலை போடப் போகிறேன் என்பதை நினைத்தாால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இன்று நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதே லக் தான். பாக்யராஜ் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இனி அவர் இல்லாமல் திரைப்பட விழாக்கள் எப்படி இருக்கப் போகிறது?. வாசு வேதனை: விழாக்களில் அவர் பேசினால் தனி ஹியூமர் இருக்கும். அவர் இல்லாமல் இருக்கப் போகிறோம் என்பதையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 10 நாட்கள் எங்கேயோ இருந்தார், சீரியஸாக இருந்தார் என்றால் கூட ஏற்கலாம். ஆனால் திடீரென்று காலையில் போன் செய்து அவர் இறந்துவிட்டார் என்று சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. நேற்று முன்தினம் தான் அவருடன் விமானத்தில் பயணம் செய்தேன். இன்று அவர் உடலுக்கு மாலை அணிவிக்கிறேன். அவர் உயிருடன் இல்லை என்பது ரொம்ப கஷ்டமாக உள்ளது. இது திரைத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு. பாக்யராஜின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.சேரன் ட்வீட்: தான் பாக்யராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சேரன். பாக்யராஜ் இல்லை என்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அதே சமயம் தன் படங்கள், சாதனைகள் மூலம் என்றென்றும் நம்முடன் வாழ்வார் என்கிறார் சேரன். சிஷ்யன் மரணம்: என்று பேசப்படுகிறது. பாரதிராஜா இயக்கிய முதல் படமான 16 வயதினிலே தான் பாக்யராஜ் உதவி இயக்குநர் அவதாரம் எடுத்த படமாகும். அந்த குருவிடம் கற்றுக் கொண்ட கலையை தன் ஸ்டைலில் சிறப்பாக காட்சிபடுத்தி பெயர் எடுத்தவர் பாக்யராஜ். ஜூன் 10ம் தேதி பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவருக்கு இன்று மற்றவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டியதாகிவிட்டது.கல்யாண வீடு: 80ஸ் பிரபலங்களின் ரீயூனியனில் தன் மனைவி பூர்ணிமா உடன் கலந்து கொள்வார் பாக்யராஜ். இந்நிலையில் எல்லா விருந்தினர்களை போன்று அவரும் தங்க நிற உடை அணிந்திருந்தார். மணமக்களை சிரித்த முகமாக ஆசிர்வாதம் செய்தார். அதன் பிறகு விருந்து சாப்பிட்டார். அந்த வீடியோக்களை பார்ப்பவர்களின் கண்கள் கலங்குகிறது. இதற்கிடையே , இது என்ன கொடுமை என்று வைரமுத்து ஒரு பக்கம் புலம்பியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *