முதல் சம்பளத்தில் கணக்கைத் தொடங்க வேண்டும்!
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் முதல் சம்பளத்தைப் பெறும்போதே (PPF) கணக்கைத் தொடங்கினால், அவர்கள் பெரும் செல்வத்தைச் சேர்க்க முடியும். ஆனால் பலருக்கு PPF திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை. வேலையில் சேரும்போதே சம்பளக் கணக்கு மற்றும் PF கணக்கு ஆகியவை தொடங்கப்படுகின்றன. ஆனால் PF கணக்கில் உள்ள பணம் தனிப்பட்டது. அது உங்கள் முதுமைக் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், PPF கணக்கு என்பது முற்றிலும் மாறுபட்டது. இதில் முதலீடு செய்வதன் மூலம் வெறும் 15 ஆண்டுகளில் நீங்கள் பெரிய தொகையைச் சேர்க்க முடியும். முதல் சம்பளத்துடனேயே PPF கணக்கைத் தொடங்கினால் உங்களிடம் லட்சக்கணக்கில் நிதி சேரும். இதன் மூலம் நீங்கள் சொந்தமாக வீடு வாங்குவது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான முதலீடுகளையும் மேற்கொள்ள முடியும்.
வெறும் 10,000 ரூபாய் சேமிப்பு போதும்!
உங்களுடைய 25ஆவது வயதில் முதல் வேலையைத் தொடங்கி ரூ. 30,000 சம்பளம் பெறும்போது, உங்கள் நிதிப் பொறுப்புகள் குறைவாக இருக்கும். உங்கள் சம்பளத்திலிருந்து மாதம் 10,000 ரூபாயை PPF கணக்கில் செலுத்தத் தொடங்கினால், ஓரே ஆண்டில் ரூ. 1.20 லட்சம் சேமிக்கலாம். இதன் மூலம் 15 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 18,00,000 சேமித்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கான நிலையான வட்டித் தொகை ரூ. 14,54,567 ஆக இருக்கும். இதனால் மொத்தத் தொகை ரூ. 32,54,567 ஆக உயரும். PPF கணக்குகள் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகின்றன. காலப்போக்கில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, கிடைக்கும் வட்டித் தொகையும் அதிகரிக்கும்.

