52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
இது அராஜகம்.. ஆய்வு கிடையாது: அமைச்சர் கீர்த்தனாவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்

தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியை சார்ந்தவர்கள் அரசுப்பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தவெகவை சார்ந்தவர்கள் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்வதாக கூறி முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படத்தை மாணவர்களிடம் காண்பித்து பேசுவது. வகுப்பறையில் அவரின் போட்டோவை மாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இது கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் செய்துள்ள ஆய்வு எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருந்தங்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலையைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அவர்கள் பதிலளிக்காமல் திணறியதை தொடர்ந்து, கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களுக்கு ஒன்றும் தெரியாதது என்பதை போன்று ஒரு கருத்தையும் சொன்னார். இது சம்பந்தான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் அமைச்சர் கீர்த்தனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் , அமைச்சர் கீர்த்தனாவின் செயலை கண்டித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது, தவெகவினர் “ஆய்வு” என்ற பெயரில் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு ஆய்வு என்ற பெயரில் கேமராக்கலுறன் சென்று, ஆங்கிலம் தெரியவில்லை என அங்குள்ள குழந்தைகளை குத்திக் காட்டியுள்ளார். மாணவர்கள் முன்னிலையிலே அங்குள்ள ஆசியர்களுடைய கற்பித்தல் திறனை குறை கூறி “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என லேபில் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார். அதோடு நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போன்று படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது. “அராஜகம்” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், செல்லும் இடமெல்லாம் அதிகாரிகளை விடவும் மேமராமேன்களை கையோடு அழைத்து செல்லும் தவெக அமைச்சர்கள் “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.அதனை விட்டு இப்படி படிக்கும் பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயற்சி செய்யக் கூடாது என தன்னுடைய பதிவில் அறிவுறுத்தியுள்ளார் நயினார் நாகேந்திரன். தொடர்ந்து முதல்வர் விஜய் களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும். மேலும் தன்னை கற்றறிந்த ஞானி போன்று காட்டி கொள்வதற்கு அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி, அதனை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா மீது தகுந்த நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும். இவ்வாறு கீர்த்தனாவின் ஆய்வுக்கு கடுமையான எதிர்ப்பினை தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதே போல் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *