52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர்: வேதனையின் உச்சம் – நாதக சீமான் ஆவேசம்

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தவெக அரசினை தொடர்ச்சியாக அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக கடுமையான கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்து மேடைக்கு மேடை பேசினார். இதனிடையில் தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றனர்.ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற விமர்சனத்தையும் தவெக எதிர்க்கொண்டு வருகிறது. இதனிடையில் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே ஆன பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட உயிரிழந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது, கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் மூன்று வயதான பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை. தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழ்நாடு காவலதுறை இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்து கொண்டிருக்கிறதா என தன்னுடைய அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். மேலும் தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்து இருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா? ஆட்சி என ஓன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் போகும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.அதோடு, தமிழ்நாடு முதல்வர் வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்துகிறார். அதே நேரம் போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வம், வேகத்தை ஏன் காட்டுவதில்லை? தமிழ்நாடு முதலமைச்சர் போதை ஒழிப்பை தன்னுடைய அரசிடம் இருந்து துவங்க வேண்டும். ஊர் முழுவதும் டாஸ்மாக் பார்களை திறந்து வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிக்கப் போவதாக தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது. ஏதும் அறியா பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிக்க வேண்டும். இது ஒன்றே இப்படிய்டான கொடுங்குற்றங்களை தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். இனியாவது வெற்றி விளம்பர அரசியல் செய்வதை தவெக அரசு நிறுத்தி பெண்களை, குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு காட்டமாக தன்னுடைய அறிக்கையஈல் குறிப்பிட்டுள்ளார் சீமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *