- புதிய நிறுத்தங்கள்: பஞ்சப்பூரில் இருந்து புறப்பட்டு சத்திரம் வழியாகச் செல்லும் வெளியூர் மற்றும் உள்ளூர் நகரப் பேருந்துகள், பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏதுவாகச் சத்திரம் ரம்பா-ஊர்வசி திரையரங்கம் அருகே ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நெரிசல் இல்லாத யு-டர்ன்: வெளியூர் பேருந்துகள் அதிக நெரிசல் மிகுந்த சத்திரம் சந்திப்பிற்குள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில், காமராஜர் சிலை அருகே பேருந்துகள் எளிதாகத் திரும்பிச் செல்வதற்கான (U-turn) தனிப் பாதை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்களுக்கு அபராதம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம்பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் திருச்சி மாநகரக் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சத்திரம் பகுதியில் ஒன்-வே (One-way) விதிகள மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவோர் (No Parking Violations) மீது தினசரி அடிப்படையில் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 40 முதல் 50 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரூ. 500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், சத்திரம் பேருந்து நிலையச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளும் சில இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், அதற்கான கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.சமூக ஆர்வலர்களின் வரவேற்பும் கூடுதல் கோரிக்கைகளும்மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்குத் திருச்சி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினர் பி. அய்யாரப்பன் கூறுகையில்:"விழுப்புரம் கோட்டக் கடலூர் பேருந்துகளைப் பஞ்சப்பூருக்கு மாற்றியது ஒரு மிகச் சிறந்த தொடக்கமாகும். ஆனால் சத்திரத்தின் நெரிசலை முழுமையாகக் குறைக்க வேண்டுமானால், கும்பகோணம் கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் பெரம்பலூர் மற்றும் துறையூர் மார்க்கப் பேருந்துகளையும் உடனடியாகப் பஞ்சப்பூர் முனையத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்."
துரித நடவடிக்கை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து ஊடகங்களில் வெளியான தொடர் செய்திகளைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடலூர், நெய்வேலி பேருந்துகளின் இடமாற்றம் சத்திரம் பகுதிக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. இதேபோல, மற்ற வெளியூர் பேருந்துகளையும் படிப்படியாகப் பஞ்சப்பூருக்கு மாற்றி, சத்திரம் பேருந்து நிலையத்தை முழுமையாக உள்ளூர் நகரப் பேருந்துகளுக்கு மட்டுமே ஒதுக்கினால், திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

