52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கடற்படையை அணுஆயுதமயமாக்கும் வடகொரியா: புதிய 5,000 டன் போர்க்கப்பல் சோதனை – கிம் ஜாங் உன் திடீர் ஆய்வு

மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் லட்சகணக்கான உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. குறிப்பாக வட கொரியா, ரஷ்யா, தென் கொரியா , அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம், அணு ஆதயும் உள்ள நாடுகள் ஆகும். இதனால் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் இருந்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா தனது கடற்படையின் அணுசக்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிதாகப் பழுதுபார்க்கப்பட்ட 5,000 டன் எடையுள்ள அதிநவீனப் போர்க்கப்பலில் (Destroyer) அணுசக்தி சுமந்து செல்லும் திறன் கொண்ட குரூஸ் ஏவுகணை மற்றும் பல்வேறு ஆயுத அமைப்புகளின் சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 'காங் கோன்' (Kang Kon) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. தற்போது அது முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில் குரூஸ் ஏவுகணை ஏவப்பட்டதுடன், போர்க்கப்பலின் முதன்மைத் துப்பாக்கி மற்றும் தானியங்கி பீரங்கிகளை இயக்கும் சோதனைகளும் நடத்தப்பட்டன. மேலும், கப்பலின் மின்னணுப் போர் முறைகள் இலக்குகளைக் கண்டறிதல் மற்றும் தகவல் செயலாக்கத் திறன்கள் ஆகியவையும் இந்த சோதனையின் போது ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வர உத்தரவு:

கடற்கரையில் இருந்து இந்த சோதனைகளைக் கண்காணித்த அதிபர் கிம் ஜாங் உன், எஞ்சியிருக்கும் சோதனைகளையும் விரைந்து முடித்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த போர்க்கப்பலை முழுமையான ராணுவப் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை கடலில் நிலைநிறுத்துவது மற்றும் கடற்படையை நவீனமயமாக்குவது போன்ற வடகொரியாவின் தொடர் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில் 'சோ ஹியோன்' என்ற மற்றொருயில் இணைத்தது. இதனை அணு ஆயுதம் ஏந்திய கடற்படையை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய மைல்கல் என்று கிம் ஜாங் உன் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடகொரிய அதிபர் கிம், நாட்டின் கடற்படை அணுசக்தித் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகக் கூறியதுடன், 10,000 டன் எடை கொண்ட இன்னும் பெரிய மற்றும் மேம்பட்ட போர்க்கப்பல்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு 5,000 டன் போர்க்கப்பல்களை உருவாக்க வேண்டும் என்றும் கிம் ஜாங் உன் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கடற்படை அணுசக்தி மீதான அதிகரித்த கவனம்:

வடகொரியா தனது வழக்கமான ஏவுகணைத் திட்டங்களில் இருந்து படிப்படியாக மாறி, தற்போது கடற்படை விரிவாக்கம், நீர்மூழ்கிக் கப்பல் அடிப்படையிலான அணுசக்தித் திறன் மற்றும் நீருக்கு அடியில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.புதிய 'சோ ஹியோன்' போர்க்கப்பலில் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக வடகொரியா கூறினாலும், அதன் உண்மையான செயல்பாட்டுத் திறனை சர்வதேச வல்லுநர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் ராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில், இந்த போர்க்கப்பல்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என்று தென்கொரிய அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் நடைபெற்ற அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததில் இருந்து, வடகொரியா தன்னை எவராலும் மாற்ற முடியாத ஓர் அணுஆயுத நாடு என்று தொடர்ந்து பிரகடனப்படுத்தி வருகிறது. 1950-53 கொரியப் போர் வெறும் போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் மட்டுமே முடிவடைந்ததால் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரிலேயே ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *