இரண்டு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வர உத்தரவு:
கடற்கரையில் இருந்து இந்த சோதனைகளைக் கண்காணித்த அதிபர் கிம் ஜாங் உன், எஞ்சியிருக்கும் சோதனைகளையும் விரைந்து முடித்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த போர்க்கப்பலை முழுமையான ராணுவப் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை கடலில் நிலைநிறுத்துவது மற்றும் கடற்படையை நவீனமயமாக்குவது போன்ற வடகொரியாவின் தொடர் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில் 'சோ ஹியோன்' என்ற மற்றொருயில் இணைத்தது. இதனை அணு ஆயுதம் ஏந்திய கடற்படையை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய மைல்கல் என்று கிம் ஜாங் உன் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடகொரிய அதிபர் கிம், நாட்டின் கடற்படை அணுசக்தித் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகக் கூறியதுடன், 10,000 டன் எடை கொண்ட இன்னும் பெரிய மற்றும் மேம்பட்ட போர்க்கப்பல்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு 5,000 டன் போர்க்கப்பல்களை உருவாக்க வேண்டும் என்றும் கிம் ஜாங் உன் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடற்படை அணுசக்தி மீதான அதிகரித்த கவனம்:
வடகொரியா தனது வழக்கமான ஏவுகணைத் திட்டங்களில் இருந்து படிப்படியாக மாறி, தற்போது கடற்படை விரிவாக்கம், நீர்மூழ்கிக் கப்பல் அடிப்படையிலான அணுசக்தித் திறன் மற்றும் நீருக்கு அடியில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.புதிய 'சோ ஹியோன்' போர்க்கப்பலில் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக வடகொரியா கூறினாலும், அதன் உண்மையான செயல்பாட்டுத் திறனை சர்வதேச வல்லுநர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் ராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில், இந்த போர்க்கப்பல்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என்று தென்கொரிய அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் நடைபெற்ற அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததில் இருந்து, வடகொரியா தன்னை எவராலும் மாற்ற முடியாத ஓர் அணுஆயுத நாடு என்று தொடர்ந்து பிரகடனப்படுத்தி வருகிறது. 1950-53 கொரியப் போர் வெறும் போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் மட்டுமே முடிவடைந்ததால் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரிலேயே ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

